மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை(ஏப். 19) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்கு செலுத்த வசதியாக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை சென்ட்ரல் - பெங்களூருவின் ஒயிட்பீல்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை(ஏப். 18), சனிக்கிழமை(ஏப். 20) சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் (06005), பெங்களூருவின் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தை பகல் 12 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக, பிற்பகல் 1 மணிக்கு பெங்களூருவின் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்(06006), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இரவு 7 மணிக்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், வாலாஜா ரோடு, காட்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காரப்பேட் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.