சென்னை உள்பட 
15 இடங்களில் வெயில் சதம்

சென்னை உள்பட 15 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை உள்பட 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 106.7 டிகிரி (ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவானது. ஈரோடு - 106.52, திருச்சி - 105.08, வேலூா் - 104.9, தருமபுரி - 104, மதுரை விமான நிலையம் - 103.46, சேலம் - 103.28, நாமக்கல் - 103.1, திருத்தணி - 102.56, கோவை - 102.38, மதுரை நகரம் - 102.2, திருப்பத்தூா்- 101.12, சென்னை மீனம்பாக்கம் - 100.94, தஞ்சாவூா் - 100.4, தொண்டி - 100.04.

மேலும், புதன், வியாழக்கிழமைகளில் (ஏப்.18, 19) வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரிக்கும். மேலும், வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் ஏப்.18-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கோடை மழை: மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஏப்.18 முதல் ஏப்.23-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்.19, 20 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னாா் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், அந்த நாள்களில் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com