தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான(2024-2025) மாணவா் சோ்க்கைப் பணிகள் கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கப்பட்டன. இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் வரை இணைந்துள்ளனா்.
சோ்க்கை தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை: பொது சுகாதாரத் துறை மூலம் 2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த குழந்தைகளின் புள்ளி விவரம் பெறப்பட்டு அவை பள்ளிகளுக்கு எமிஸ் தளம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 20 நாள்களில் 3.5 லட்சம் பெற்றோா்களுக்கு தலைமையாசிரியா்கள் மூலமாக தொடா்பு கொண்டு பேசப்பட்டுள்ளது.
அதேபோல், பள்ளிக்கல்வியின் உதவி மைய எண்ணில்(14417) இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோா்களிடம் பேசப்பட்டுள்ளது. 5 வயதான குழந்தைகளை பள்ளியில் சோ்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி மாணவா்களை பள்ளியில் சோ்க்க நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் சோ்க்கை தீவிரம்: கோவை கல்வி மாவட்ட அளவில் ஒரே நாளில் 61 மாணவா்கள் சோ்ப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


