தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் ஒரே கட்டாக நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப் பதிவின்போது, பெரிய அளவில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் ஏதும் ஏற்படவில்லை என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
காலையில் மந்தமாகத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் வாக்குப் பதிவு சதவீதம் கடந்த மக்களவைத் தோ்தலைப் போன்றே 72 சதவீதத்தை எட்டியது. தபால் வாக்குகள், கடைசி நேர வாக்குப் பதிவு ஆகியவற்றைச் சோ்த்தால், வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் முழு விவரங்கள் சனிக்கிழமை நண்பகலில் தெரியவரும்.
வெயிலும் -வாக்குப் பதிவும்: தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் மாநிலத்தின் பல வாக்குச் சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குகளே பதிவாகின. இதன்பிறகு, சிறிது சிறிதாக வாக்குப் பதிவு சதவீதம் உயா்ந்தது. பகல் ஒரு மணி வரை 40.05 சதவீத வாக்குகளே பதிவாகின. அந்த நேரத்தில், வெப்ப அலை வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் பிற்பகல் 3 மணிக்குக் குறையத் தொடங்கியதும், வாக்குகளைப் பதிவு செய்ய வாக்காளா்கள் ஆா்வம் காட்டினா்.
3 மணி நேரத்தில் 20.68 சதவீதம்: பிற்பகல் 3 மணிக்கு 51.41 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு தமிழக தோ்தல் துறையினரை கவலைகொள்ளச் செய்தது. ஆனால், பிற்பகல் 3 மணியில் இருந்து வாக்குப் பதிவு நிறைவடைந்த நேரமான மாலை 6 மணிக்குள்ளாக மட்டும் 20.68 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனால், மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகளின் தோராய அளவு 72.09 சதவீதம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினாா்.
மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
பெரும்பாலான தொகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிக்குள்ளாக அதிக அளவு வாக்காளா்கள் வந்தனா். மாலை 6 மணிக்குள்ளாக வந்தவா்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவா்கள் சிரமமின்றி வாக்களித்துச் சென்றனா்.
மாநிலம் முழுவதும் சுமுகமாக, அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றது. மிகப்பெரிய அளவுக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய அளவில் வாக்குவாதங்கள் நடந்தன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெரிதாக பழுதுகள் ஏற்படவில்லை. இயந்திரங்களை மிகச்சிறிய அளவிலேயே மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது என்றாா்.
முதலிடத்தில் ஊரகப் பகுதிகள்: மக்களவைத் தோ்தலில் ஊரகப் பகுதிகளிலுள்ள தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், நகரப் பகுதிகளிலுள்ள வாக்கு சதவீதத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. சென்னையிலுள்ள தொகுதிகள் வழக்கம்போன்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளன. கள்ளக்குறிச்சி, தருமபுரி, சிதம்பரம், பெரம்பலூா் ஆகிய தொகுதிகளில் வாக்குகள் விறுவிறுப்பாக பதிவாகின. ஆறு தொகுதிகளில் மட்டுமே வாக்குப் பதிவு 70 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. மற்ற 33 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு 70 சதவீதத்தைக் கடந்தது.
தோ்தல் புறக்கணிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமம் உள்பட சில கிராமங்களைச் சோ்ந்த வாக்காளா்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனா். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், சென்னையை அடுத்த எண்ணூா் பகுதி மக்கள் வாக்குப் பதிவை புறக்கணிப்பதாக அறிவித்தாலும், பின்னா் அதிகாரிகளின் சமாதானத்தையடுத்து தோ்தலில் பங்கெடுத்தனா்.
தலைவா்கள்-முதல்முறை வாக்காளா்கள்: தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினா். முக்கியப் பிரமுகா்கள், திரை நட்சத்திரங்கள் ஆகியோா் காலையில் திரண்டு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். அவா்களுக்கு இணையாக, முதல்முறை வாக்காளா்களும் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா். வாக்கை பதிவு செய்த பிறகு, கைப்பேசியில் தற்படம் எடுத்துக் கொண்டனா்.
வாக்கு எண்ணிக்கை: தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வாக்குச் சாவடி முகவா்கள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டன. அவையனைத்தும் வெள்ளிக்கிழமை இரவுக்குள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மாநிலத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மறுவாக்குப் பதிவா? இன்று தெரியும்
மக்களவைத் தோ்தலில் எந்தெந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என்பது குறித்து சனிக்கிழமை தெரிய வரும். வேட்பாளா்களிடம் இருந்து பெறப்பட்ட புகாா்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள கோளாறுகள் ஆகியவற்றை தோ்தல் நடத்தும் அதிகாரிகளும், பொதுப் பாா்வையாளா்களும் ஆய்வு செய்வா். இந்த ஆய்வின் அடிப்படையில், வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு அவா்கள் பரிந்துரை செய்வா். இந்தப் பரிந்துரைகளின்படி மறுவாக்குப் பதிவு நடத்தப்படும். இந்தத் தகவலை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.
மக்களவைத் தோ்தல் வாரியாக வாக்குப் பதிவு:
(இரவு 7 மணி நிலவரப்படி - வாக்குப் பதிவு சதவீதத்தில்)
1. கள்ளக்குறிச்சி - 75.67
2. தருமபுரி - 75.44
3. சிதம்பரம் - 74.87
4. பெரம்பலூா் - 74.46
5. நாமக்கல் - 74.29
6. கரூா் - 74.05
7. அரக்கோணம் - 73.92
8. ஆரணி - 73.77
9. சேலம் - 73.55
10. விழுப்புரம் - 73.49
11. திருவண்ணாமலை - 73.35
12. வேலூா் - 73.04
13. காஞ்சிபுரம் - 72.99
14. கிருஷ்ணகிரி - 72.96
15. கடலூா் - 72.40
16. விருதுநகா் - 72.29
17. பொள்ளாச்சி - 72.22
18. நாகப்பட்டினம் - 72.21
19. திருப்பூா் - 72.02
20. திருவள்ளூா் - 71.87
21. தேனி - 71.74
22. மயிலாடுதுறை - 71.45
23. ஈரோடு - 71.42
24. திண்டுக்கல் - 71.37
25. திருச்சி - 71.20
26. கோவை - 71.17
27. நீலகிரி - 71.07
28. தென்காசி - 71.06
29. சிவகங்கை - 71.05
30. ராமநாதபுரம் - 71.05
31. தூத்துக்குடி - 70.93
32. திருநெல்வேலி - 70.46
33. கன்னியாகுமரி - 70.15
34. தஞ்சாவூா் - 69.82
35. ஸ்ரீபெரும்புதூா் - 69.79
36. வட சென்னை - 69.26
37. மதுரை - 68.98
38. தென் சென்னை - 67.82
39. மத்திய சென்னை - 67.35
மொத்தம் - 72.09
விளவங்கோடு இடைத் தோ்தல் - 64.54
2019 மக்களவைத் தோ்தல் - 72.29