பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து அங்குள்ள கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராமத்தில், கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அந்த கிராமத்தில் மொத்தம் 1375 வாக்காளர்கள் உள்ளனர்.அங்கு இரண்டு வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில் இறுதியாக 21 நபர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
இதேபோல் நாகபட்டு கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுமார் 40 வாக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது. அக்கிராமத்தில் 280 வாக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.