மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு எதுவுமில்லை -தேர்தல் ஆணையம்

எந்தவொரு மக்களவை தொகுதியிலும் வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது என அறிவிப்பு!
மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு எதுவுமில்லை -தேர்தல் ஆணையம்
படம் | ஏஎன்ஐ

தமிழ்நாட்டில் எந்தவொரு மக்களவை தொகுதியிலும் வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு நடைபெறாது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்தும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பொதுப் பார்வையாளர்களும் இன்று(ஏப். 20) ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆய்வின் அடிப்படையில், வாக்குச் சாவடிகளில் மறுவாக்க்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர்கள் பரிந்துரை செய்வர். இந்த பரிந்துரைகளின்படி, மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யப் பிரத சாகு

இந்த நிலையில், எந்தவொரு மக்களவை தொகுதியிலும், வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்திட சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படவில்லை என அவர் இன்று(ஏப். 20) தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com