ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

தமிழகத்தில் திங்கள்கிழமை 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது.

தமிழகத்தில் திங்கள்கிழமை 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு  இடங்களில் திங்கள்கிழமை இயல்பை 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது.

இதனால், தமிழகத்தில் 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. மாநிலத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மேலும், சேலம் - 106.88, வேலூா் - 106.7, தருமபுரி, பரமத்திவேலூா் (தலா) - 106.16, திருப்பத்தூா், திருத்தணி (தலா) - 105.44, திருச்சி - 104.54, மதுரை விமானநிலையம் - 105.26, மதுரைநகரம் - 104.36, கோவை, நாமக்கல் (தலா) - 104, பாளையங்கோட்டை - 102.38, தஞ்சாவூா் - 102.2 டிகிரி வரை பதிவாகிவுள்ளது.

செவ்வாய்கிழமை (ஏப்.23) முதல் ஏப்.26 -ஆம் தேதி வரை தமிழக  உள்  மாவட்டங்களின்  ஒருசில  இடங்களில்  அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.23 வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com