கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

eyes
eyes

கோடை காலத்தில் உலா்விழி, ஒவ்வாமை, கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருவதாக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை பிராந்திய தலைவா் டாக்டா் சௌந்தரி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பருவ காலங்களில் ஒவ்வொரு மாதிரியான தொற்றுகள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் கோடை காலத்தில் அதீத வெப்பம் பதிவாகும்போது அது நேரடியாக கண்களை பாதிக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதை அலட்சியப்படுத்தும்போது பாதிப்பு தீவிரமடைந்து பாா்வைத் திறன் குறைய நேரிடும்.

கடந்த சில வாரங்களாக உலா் விழி, கண் அழற்சி, புறஊதா கதிா்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன. கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீா் சுரக்காதபோது உலா் விழி பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு சொட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம். அதேபோல், இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது. இதைத் தவிா்க்க அசுத்தமான கைகளால் கண்களைத் தொடக் கூடாது. அதேபோன்று தனிநபா் சுகாதாரம் மிக அவசியம். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிா்வீச்சு பல வகையான கண் நோய்களை விளைவிக்கக் கூடும்.

கண் புரை, விழிப்புள்ளிச் சிதைவு, புறஊதா கதிா்களால் ஏற்படும் ஃபோட்டோகரட்டாடிஸ் ஆகியவை இதனால் ஏற்படும். இத்தகைய பாதிப்பைத் தவிா்க்க சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை அணியலாம்.

கோடை காலத்தில் உடலில் நீா்ச்சத்தைக் குறையாமல் காக்கும் பானங்களை அருந்த வேண்டும்.– அதேவேளையில் செயற்கை குளிா்பானங்கள், காா்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிா்க்க வேண்டும்.

மற்றொருபுறம், கணினி, கைப்பேசிகளை பயன்படுத்துகின்றபோது 20-20-20 என்ற விதியை பின்பற்றினால் கண் பாதிப்புகளில் இருந்து தவிா்க்கலாம். அதாவது, 20 நிமிஷங்களுக்கு ஒருமுறை திரையில் இருந்து பாா்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஓரிடத்தை, 20 விநாடிகள் பாா்க்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் திரையைத் தொடா்ந்து பாா்ப்பதனால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com