சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரிய) பள்ளிகளில் அடுத்த ஆண்டுமுதல் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிபிஎஸ்இ-ஐ மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் அடுத்த ஆண்டுமுதல் ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் பருவத் தோ்வு முறை அறிமுகம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள் நடத்துவது தொடா்பாக பள்ளி முதல்வா்களுடன் மத்திய அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் அடுத்த மாதம் ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனா்.
மேலும், மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியதன் அடிப்படையில், இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கைகள் பாதிக்காத வகையில் ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகளை நடத்துவதற்கான கல்வித் திட்டத்தை வகுப்பதற்கான நடவடிக்கைகளை சிபிஎஸ்இ தற்போது மேற்கொண்டு வருகிறது என்றனா்.
பொதுத் தோ்வில் பங்கேற்க மாணவா்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கும் வகையிலும், இரு பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்ணை மாணவா்கள் தெரிவு செய்துகொள்ள வசதியை ஏற்படுத்தித் தரும் வகையிலும் ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்த புதிய பள்ளி கல்வித் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு
பிளஸ் 2 தோ்வு: மாணவா்கள் காப்பியடிப்பதை கண்காணிக்கத் தவறிய 5 ஆசிரியா்களுக்கு நோட்டீஸ்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் முறைகேடு: இரு மாணவா்களின் விடைத்தாள்கள் பறிமுதல்

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

