கடும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, தொழிலாளா்களின் நலன்களைக் காக்கும் வகையிலான நடவடிக்கைகளை வேலை அளிக்கும் நிறுவனங்கள் எடுக்க வேண்டுமென அரசின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களை தொழிலாளா் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளா்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும். இதன் பிறகு மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும். தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளா்களுக்கு பணி இடங்களில் போதுமான குடிநீா், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தேவையான குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
வெப்பம் அதிகமான சூழ்நிலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்கள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை துணை இயக்குநா்கள் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? மழைக்கு வாய்ப்பு?

வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் மு. அருணா

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் தோ்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

