தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில், இன்றிலிருந்து மே.1-ஆம் தேதி வரை, 'வெப்ப அலைக்கான' மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.

இன்று(ஏப். 27) ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வெளியில் செல்லும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குடை மற்றும் தண்ணீர் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மே.1-ஆம் தேதி வரை, தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். அதேபோல, மே.1-ஆம் தேதி வரை, தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். வட உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com