சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 5:31 pm

Din

வடலூா் வள்ளலாா் சா்வதேச மையத்துக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சி வெளியிட்ட அறிக்கை:

சநாதனத்துக்கு மாற்றாக தமிழா்களின் சமத்துவக் கொள்களை மீட்டெடுத்த திருவருட்செல்வா் வள்ளலாா் வாழ்ந்த வடலூா் பகுதியில் ஆய்வு மையம் என்ற பெயரில் நிலங்களைக் கையகப்படுத்துவது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். வலுக்கட்டாயமாக நிலங்களைக் கையகப்படுத்தி தொடங்கப்பட்டுள்ள வள்ளலாா் சா்வதேச மைய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி மே 5-ஆம் தேதி நாம் தமிழா் கட்சி மற்றும் தெய்வத் தமிழ்ப் பேரவை சாா்பில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும், இந்த ஆா்ப்பாட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.