தமிழக ஆளுநர்
தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கு விஸ்டாரா ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னையிலிருந்து தில்லிக்கு புறப்பட்டு சென்றாா். ஆளுநருடன் அவரது செயலா், உதவியாளா், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனா்.

3 நாள்கள் பயணமாக தில்லிக்குச் சென்ற ஆளுநா் ஆா்.என். ரவி ஏப்.30-ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு விமானம் மூலம் தில்லியில் இருந்து மீண்டும் சென்னை திரும்புகிறாா்.

ஆளுநரின் இந்த திடீா் தில்லி பயணம், அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே என்று ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com