நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் இன்று(ஏப். 28) 2.15 மணி நேரம் தாமதமாக புறப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ‘நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு விரைவு ரயில்(06021)’, இன்று(ஏப். 28), நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.45 மணிக்கு பதிலாக, இரவு 8 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் இணை ரயில் தாமதமாக இயக்கப்படுவதால், 2.15 மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள், அதற்கேற்ப தங்கள் பயனத்தை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com