
சிதம்பரத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று வேணுகோபால் பிள்ளை தெரு படித்துறை இறக்கத்தில் எதிரே சைக்கிளில் வந்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் முத்துக்குமார் (52) என்பவர் மீது மோதியது.
இதில் பேருந்து முன்சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
தகவல் அறிந்த சிதம்பர நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.