செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் நான் போட்டியிடுவேன்; இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பாஜகவை விட்டு அதிமுக விலகிச் சென்றாலும், அதிமுகவை பாஜக விடுவதாக இல்லை, அதிமுகவை பலவீனப்படுத்தி 3 ஆம் இடத்திற்கும் தள்ளும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் போட்டியிடுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
தில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் விசிகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.