முரசொலி அறக்கட்டளை நில விவகாரம்: ஜன.10-ல் தீர்ப்பு
முரசொலி அறக்கட்டளை வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அறக்கட்டளை நிலம், ஆவணங்களின்படி பஞ்சமி நிலம் இல்லை என வருவாய்த் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் அதிகாரபூா்வ நாளேடான ‘முரசொலி’-யின் அறக்கட்டளை நிலம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் மற்றும் 1,825 சதுர அடியில் அமைந்துள்ளது.
இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிா்வாகி சீனிவாசன் 2019-ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த புகாா் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்தும், அறக்கட்டளை நிலம் தொடா்பாக விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடா்பான விவகாரம் என்பதால், பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனவும் முரசொலி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஆா்.எஸ்.பாரதி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் முரசொலி அறக்கட்டளை வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.