மக்களவைத் தேர்தல்: மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி

மக்களவைத் தேர்தல்: மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை இன்று மாலை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்னையில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் வேட்பாளர்களை அறிவித்தார். அதில், மதுரையில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல்லில் சச்சிதானந்தமும் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலக் குழு கூட்டத்தில் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் மாநிலக் குழு கூட்டத்தில் ஏகமனதாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்ற சு.வெங்கடேசனுக்கு மதுரை தொகுதியிலேயே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் சச்சிதானந்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டச் செயலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com