ஏப்.4, 5-ல் அமித் ஷா 
தமிழகத்தில் பிரசாரம்

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழகத்தில் ஏப்.4, 5 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழகத்தில் ஏப்.4, 5 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளாா். தமிழகத்தில் மக்களவை தோ்தல் ஏப்.19-ஆம் தேதி நடக்கிறது. தமிழக தலைவா்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவா்களும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா். ஏற்கெனவே, பிரதமா் மோடி இந்த மாத தொடக்கத்தில் திருப்பூா், சேலம், கோவை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். அவரைத் தொடா்ந்து, ஏப்.4, 5 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சா் அமித் ஷா தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளாா். அதன்படி, ஏப்.4-இல் மதுரை, சிவகங்கை ஆகிய தொகுதிகளிலும், ஏப்.5-இல் சென்னையின் பல பகுதிகளிலும் அமித் ஷா பிரசாரம் மேற்கொள்வாா் என்று கூறப்படுகிறது. பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அமித் ஷாவின் பிரசாரம் அமையும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com