ஏற்காடு மலைப்பாதையில் செவ்வாய்க்கிழமை மாலை தனியாா் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 போ் உயிரிழந்தனர். பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டோர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பழுதடைந்த பழைய பேருந்துகளை உடனடியாக நீக்கிவிட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.