கோப்புப்படம்
கோப்புப்படம்

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கலூரிகளில் சேர மே 10-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com