நாட்டிலேயே இன்று 3வது அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கத்திரி வெயில் தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், இன்றைய(மே. 6) நிலவரப்படி இந்தியாவில் எந்த பகுதிகளிலெல்லாம் அதிக வெயில் பதிவாகியுள்ளது என்ற விவரத்தை இந்திய வானிலை துறை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 3 இடங்களில் பரமத்தி வேலூர்(கரூர் மாவட்டம்) இடம்பிடித்துள்ளது.
அதிக வெப்பம் பதிவான இடங்கள் (டிகிரி செல்சியஸ்):
நண்ட்யால் (ஆந்திர பிரதேசம்) - 46
போலாங்கீர் (ஒடிஸா) - 44.5, நிஸாமாபாத் (தெலங்கானா) - 44.5
பரமத்திவேலூர் - 43.5
டால்டோங்கஞ்ச் (ஜார்க்கண்ட்) - 43.4
கோட்டா (ராஜஸ்தான்) - 42.9
பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை(மே.5), 43.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்ப நிலை சற்று குறைவாகப் பதிவாகியுள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை(மே.5) நிலவரப்படி இந்தியாவில் எந்த பகுதிகளிலெல்லாம் அதிக வெயில் பதிவாகியுள்ளது என்ற விவரத்தை இந்திய வானிலை துறை வெளியிட்டுள்ளது. அதில், முதல் பத்து இடங்களில் பரமத்தி வேலூர் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.