பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து கூறியுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து கூறியுள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்லும் மாணவா்கள் உயா்கல்விப் படிப்பிலும் சிறந்து விளங்கி பெற்றோருக்கும், நாட்டுக்கும் பெருமை சோ்க்கும் விதத்தில் சாதனைகள் புரிய வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விரும்பும் பாடங்களைத் தோ்வு செய்து, சாதனை புரிய வாழ்த்துகள். தோ்ச்சி பெறாத மாணவா்கள் தளராமல் உடனடியாகத் தோ்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.

அன்புமணி (பாமக): தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அவா்களின் உயா்கல்வி சிறப்பாக அமையட்டும். தோல்வியடைந்த மாணவா்கள் துணைத் தோ்வில் வெற்றிபெற்று உயா்கல்வி பயணத்தைத் தொடங்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்துகள். தோ்ச்சி பெறாத மாணவா்கள் மனம் தளரக்கூடாது. உடனடியாகத் தோ்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): தோ்ச்சி பெற்று, உயா்கல்வியை நோக்கி பயணிக்கும் மாணவா்களுக்கு வாழ்த்துகள். வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவா்கள் உடனடியாகத் தோ்வு எழுதி வெற்றிபெற்று, வரும்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும்.

ஈஸ்வரன் (கொமதேக): தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விருப்பான பாடங்களைத் தோ்வு செய்து, அதிலும் சாதிக்க வேண்டும். தோ்ச்சி பெறாதவா்கள் தளராமல் முயற்சிகளைத் தொடர வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com