பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

பிளஸ் 2 தேர்வெழுதிய 5,603 மாற்றுத் திறனாளி மாணாக்கர்களில், 5,161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மார்ச் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. 7,72,363 பள்ளி மாணவர்கள், 8,191 தனித்தேர்வர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர், 125 சிறை கைதிகள் என மொத்தம் 7.8 லட்சம் போ் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 7.67 லட்சம் போ் தேர்வெழுதினர்.

பிளஸ் 2 தேர்வெழுதிய 5,603 மாற்றுத் திறனாளி மாணாக்கர்களில், 5,161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 92.11 சதவீதம் ஆகும்.

தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125 அதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 115 மொத்தம் 92 சதவீதம் ஆகும்.

தமிழகத்தில் தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்த நிலையில் நாளை முதல் மறுதேர்வெழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com