சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்(06020)’, இன்று(மே.6), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு பதிலாக, நாளை(மே. 7) காலை 10.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் இணை ரயில் தாமதமாக இயக்கப்படுவதால், 19.20 மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள், அதற்கேற்ப தங்கள் பயனத்தை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதேபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பை வரை இயக்கப்படும் ‘டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரயில்(22160)’, இன்று(மே.6), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பதிலாக, இன்று(மே.6), மாலை 5.40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் இணை ரயில் தாமதமாக இயக்கப்படுவதால், 4.25 மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.