சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

இணை ரயில் தாமதமாக இயக்கப்படுவதால், 19.20 மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-நாகர்கோவில் சிறப்பு  ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்(06020)’, இன்று(மே.6), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு பதிலாக, நாளை(மே. 7) காலை 10.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் இணை ரயில் தாமதமாக இயக்கப்படுவதால், 19.20 மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள், அதற்கேற்ப தங்கள் பயனத்தை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சென்னை-நாகர்கோவில் சிறப்பு  ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!
நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

அதேபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பை வரை இயக்கப்படும் ‘டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரயில்(22160)’, இன்று(மே.6), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பதிலாக, இன்று(மே.6), மாலை 5.40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் இணை ரயில் தாமதமாக இயக்கப்படுவதால், 4.25 மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com