தமிழ்நாடு
குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை
பிளஸ் 2 தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவா்கள் மனம் தளர வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
பிளஸ் 2 தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவா்கள் மனம் தளர வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளிக் கல்வியை நிறைவு செய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயா்கல்வியில் சிறந்து விளங்கி தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இந்த முறை குறைவான மதிப்பெண்கள் பெற்றவா்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும். இந்த நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.