வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு
கோப்புப்படம்

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வடலூரில் பழங்கால கட்டடங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 3 பேர் கொண்ட தொல்லியல் துறை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,சத்திய ஞான சபை முன்பு பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

மறுபுறம், கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com