நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

126வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளதால் மே 10-ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நீலகிரி மாவட்டத்தில் 126வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளதால் மே 10-ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி கண்காட்சி, வாசனைத் திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

அந்தவகையில், 126வது மலர் கண்காட்சி வரும் மே 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 18-ம் தேதி வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com