ஒரே நாளில் மூன்று முறை விலை உயர்ந்த தங்கம்!

அட்சய திருதியை முன்னிட்டு இன்று ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்ததுள்ளது.
ஒரே நாளில் மூன்று முறை விலை உயர்ந்த தங்கம்!

அட்சய திருதியை முன்னிட்டு ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்துள்ளது.

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் குறைவின்றி என்றும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. முக்கியமாக வெள்ளை நிறப் பொருள்கள் அல்லது மஞ்சள் நிறப் பொருள்கள் வாங்குவது நலம் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஆனால், அண்மைக் காலமாக நகைக்கடைகளின் விளம்பரத்தினால், அட்சய திருதியை என்றாலே நகைக் கடைகளில் நகை வாங்குவது மட்டுமே நோக்கமாக மாற்றப்பட்டு, அதன் அடிப்படை வழக்கமே மாறிப்போயிருக்கிறது.

அந்த வகையில், இன்று நகைக் கடைகள் கொண்டாடும் அட்சய திருதியை நாள் என்பதால், தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடைக் காலம் என்பதால், நல்ல நேரம் பார்த்து பெண்கள் பலரும் காலையில் நகைக்கடை திறந்ததுமே சென்று நகைகளை வாங்க ஆர்வம் காட்டினர்.

அட்சய திருதியை முன்னிட்டு இன்று(மே 10) காலை முதல் தொடர்ந்து மூன்று முறை தங்கம் விலை உயர்ந்ததுள்ளது.

இன்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ.45 என இரண்டு முறை உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,705-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், மீண்டும் சிறிது நேரத்தில் மேலும் ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,640-க்கு விற்பனையானது.

மூன்றாவது முறையாக இன்று 3 மணிக்கு தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,705-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே தங்கம் இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.1,240 உயர்ந்துள்ளது.

அதேபோன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.91.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com