ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சரியத் தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ள நிலையில், திறக்கப்படும் நீரின் அளவால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

News image
Updated On :4 பிப்ரவரி 2024, 4:38 am

DIN

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 97 கன அடியாக சரிந்துள்ளது.

இந்த நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 6,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைய தொடங்கியது.

நேற்று காலை 70.42 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 70.05 அடியாக குறைந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 0.37 அடி குறைந்துள்ளது.

தற்போது அணையின் நீர் இருப்பு 32.74 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்த கடும் வறட்சியான சூழலில், அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை காலம் வரை மேட்டூர் அணை காவிரியில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நிலை நீடித்தால் அடுத்த நீர்ப்பாசன ஆண்டில் குறித்த நாளில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.