தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்காக தெற்கு ரயில்வேவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ. 20 கோடி நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2024, 9:39 am IST

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்காக தெற்கு ரயில்வேவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ. 20 கோடி நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் திறந்து வைத்தார்.

இந்த பேருந்து நிலையத்திலிருந்து முதல்கட்டமாக ஆம்னி பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளது. பொங்கலுக்கு பிறகு முழு அளவிலான பேருந்துகளும் இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து நகருக்குள் வரும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு தரப்பில் தெற்கு ரயில்வேவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரயில்வே நிதி கிடைத்து ரயில் நிலையம் அமைக்க காலதாமதம் ஏற்படும் என்பதால் சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியிலிருந்து முதல்கட்டமாக தெற்கு ரயில்வேவுக்கு ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை முடிக்க தெற்கு ரயில்வேவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.