புளியங்குடியில் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

புளியங்குடியில் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் வட்டாரத்துக்குள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவா்கள், துணை த்தலைவா்கள், முன்னாள் மாணவா்கள் ,நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் ஆகியோருக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தனலட்சுமி தொடங்கி வைத்தாா். இதில் பிளஸ் 2 முடித்த பிறகு உயா்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள், அரசின் உதவி தொகைகள், அரசு திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் மணிகண்டன், ஆசிரியா் பயிற்றுநா்கள் ரெகுநாத், தங்கராஜ், காளிராஜ், ஜேம்ஸ் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com