ஒருத்தி: எதுக்கு உங்க மாமனார் அகராதியைத் தலைக்கு வைத்துப் படுக்கிறார்?
மற்றவள்: இல்லாட்டா, அர்த்தமில்லாத கனவுகளாக வந்து தொலைக்குதாம்.
சி.ரகுபதி, போளூர்.
""தலையாட்டிப் பொம்மை போல இருக்கான். அவனைப் போயி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீயே? ''
""நான் எதிர்பார்த்தபடியே இருக்கானே''
ஆச்சா, செவல்குளம்.
""நீ கொஞ்சம் எடையைக் குறைச்சுக்கோடா?''
""ஏன்?''
""அந்தத் தடிப்பயலோடு ஏன் ஸ்கூலுக்கு ஒண்ணாப் போறேன்னு அம்மா திட்டுறாங்க''
சி.பன்னீர்செல்வன், செங்கல்பட்டு.
""மலையாள ஜோக் ஒண்ணு சொல்லவா?''
""வேண்டாம்''
""ஏன்? உனக்கு மலையாளம் தெரியாதா?''
""மலையாளத்தில் சிரிக்கத் தெரியாது''
பர்வதவர்த்தினி, சென்னை.