சென்னை ரயில்வே கோட்டத்தில் காட்பாடி அருகே 2011-இல் நடந்த மோதல் விபத்துக்கும் 2010-இல் போபால் கோட்டத்தில் பாதர்வாஸ் ஸ்டேஷன் அருகே நடந்த மோதல் விபத்துக்கும் முக்கிய காரணமே... எஞ்சின் ஓட்டுநர்கள் செல்போனில் பேசியபடி, கவனக்குறைவாகச் செயல்பட்டதுதான் காரணம் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக, விபத்துகள் நடக்காமல் இருக்க வேண்டுமானால், எஞ்சினில் வேலை நேரத்தில் செல்போன் பேசத் தடை விதிக்க வேண்டும்! ஆனால் டிரைவர்... உதவி டிரைவர் போகும் வழியில் பேசிச் சென்றால் அதனைக் கண்காணிக்க இயலாது! இதற்கு ஒரே வழி, எஞ்சினில் செல்போன் பேச இயலாதபடி "ஒஹம்ம்ங்ழ்' பொருத்துவதே சரியென முடிவு எடுத்துள்ளனர். இதனை உடனடியாக அமல்படுத்தி ரயில்வே பயணிகளை விபத்திலிருந்து காக்க ரயில்வே துறை அனைத்து இந்திய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.