• "மானம், ரோஷம் இருக்கா? உன் கிட்ட கொடுத்த பணத்தைத் திருப்பித் தரலையே?''
"பணம் இருந்தாத் தானே தர முடியும்? மானம், ரோஷத்தை எப்படித் தர முடியும்?''
ப.விஸ்வநாதன், கீரமங்கலம்.
• "இந்த ஆபிசுக்கு இவர்தான் பில்லர்ன்னு என்னைச் சொல்லிக்கிட்டிருந்தாங்க''
"இப்ப என்ன ஆச்சு?''
"மறைக்குதுன்னு தள்ளி வச்சிட்டாங்க''
ஏ.நாகராஜன், சென்னை-75 .
• "டாக்டர் எனக்கு கனவே வர்றது இல்லை''
"ஃபீஸ் கவுண்டர்ல போய் கனவு ரீசார்ஜ் பண்ணிட்டு வாங்க''
பி.பரத், கோவிலாம்பூண்டி .
• "ஏன்யா? வீட்டுல வச்சாதான் பணம், நகையெல்லாம் திருட்டு போகுதுன்னு தெரியுதுல்ல? பாதுகாப்பா பேங்க் லாக்கர்ல கொண்டு போய் வைக்க வேண்டியதுதானே?''
"அங்க வச்சதைத்தான் காணோம்''
பீ.ஆர்.பூஜாரமேஷ், ஒரத்தநாடு.