ஏ. ஆர்.ரகுமான் தான் சம்பாதிப்பதை எல்லாம் இசையிலேயே முதலீடு செய்கிறார். வீட்டுக்குப் பின்னால் உள்ள அவரது "பஞ்சதன்' ரெக்கார்டிங் தியேட்டரில் உலகத்தின் புதுப்புது மின்னனு இசைக் கருவிகளை வாங்கிக் குவித்திருக்கிறார்.
பலகோடி மதிப்புள்ள அந்தச் சாதனங்களை எல்லாம் வாசிக்கும் திறன் ரகுமானைத் தவிர நம்ம ஊர்களில் வேறு யாருக்கும் எளிதில் கைவசப்படாது.
அதே போன்று ரகுமான் ஒவ்வோர் ஆண்டும் தனது கீ-போர்டை புதிது புதிதாக மாற்றிக் கொண்டே இருப்பார்.
"கவிக்கோ' அப்துல் ரகுமான் சொன்னது.