• மனைவி: மரியாதையாச் சொல்லுங்க... நேத்து ராத்திரி உங்க கனவுல யார் வந்தா?
கணவன்: சத்தியமா நீதான் வந்த...
மனைவி: பொய் சொல்லாதீங்க... தூக்கத்துல சிரிச்சீங்களே...
சி.ரகுபதி, போளூர்.
• "வந்த திருடன் போயிட்டான்''
"பயத்தில ஒளிஞ்சிக்கிட்டிருக்கிற நம்ம டாமியை வெளிய வரச் சொல்லு''
• "மஞ்சள் கலர் மாத்திரை வச்சிருந்தேனே... எங்கே?''
"அடடா... மாத்திரையா அது? சந்தன வில்லைன்னு நெனைச்சு கரைச்சு வச்சிட்டேனே''
பர்வதவர்த்தினி,
சென்னை-75.
• "உள்ளே யார் விசும்பறது?''
"என் மனைவிதான் சீரியல் பார்த்து அழுறாள்''
" இப்ப சத்தமா அழறாங்களே... ஏன்?''
"கரண்ட் கட்டாகியிருக்கும். அதான்''
எம்.ஏ.நிவேதா,
அரவக்குறிச்சி.