எனக்கு சின்ன வயதிலிருந்து ரயில்வே டிக்கெட் பரிசோதகராக ஆகி, ஓடும் ரயிலில் பெட்டிக்குப் பெட்டி தாவி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைப் பிடித்து, அதை ஒரு பெரிய வீர சாகசமாகப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும் என்று தணியாத ஆசை. ஆனால், பரிசோதகராக ஆசைப்பட்டவனைப் பாட்டு எழுதுபவனாக வடிவமைத்தது முன்வினை.
- இப்படிக் கூறியவர் கவிஞர் வாலி.
( "எனக்குள் எம்.ஜி.ஆர்' நூலிலிருந்து)