தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை பயிற்றுவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுணுக்கங்களை கூறி புரிய வைக்கலாம். ஆனால் இது நல்லது, இது கெட்டது என்று பகுத்து உணராதவனை அந்த ஆண்டவனாலும் திருத்த முடியாது.
கு.அருணாசலம், தென்காசி.
தேஜஸ்வி சூர்யா .. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் மிக சிறியவர். 28 வயது. அவருடைய தகப்பனார். அனந்தகுமார் ஆறுமுறை எம்.பி.யாக இருந்தவர். போன நவம்பரில் காலமானார். அவருடைய நெருங்கிய நண்பர்கள் சூர்யாவை போட்டியிட வைத்தார்கள். இவர் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு ( பாரதீய ஜனதா கட்சியின், மூத்த தலைவர்கள் சிலர், இவருக்கு அறிவுரைகள் சொன்னார்கள்.
"பிரசாரத்தின் போது அடிக்கடி வெந்நீர் குடி. அப்போதுதான் உன் குரல் கெடாமல் இருக்கும்' என்பது அவற்றில் ஒன்று. பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர் சூர்யா. விவேகானந்தர், அரவிந்தர், அம்பேத்கர், வீரசவர்க்கார் இவர்கள் என் குரு என்கிறார்.
- அனிதா ராமசந்திரன்.