டாக்டர்: உங்க காதில் இருந்த கோளாறை சரி பண்ணிட்டேன். இனி உங்களுக்கு காது நல்லா கேட்கும்.
நோயாளி: என்னது உங்களுக்கு பீஸ் வேண்டாமா? என்ன டாக்டர் சொல்றீங்க!
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
""பிணம் எங்கேயாச்சும் நடக்குமா டாடி?''
""நடக்காதுப்பா''
""பிறகு ஏன் "நடைபிணம்'ன்னு சொல்றாங்க?''
வி.ரேவதி, தஞ்சை.
""இ.பி.க்கு போன் பண்ணி கரண்ட் எப்ப வரும்னு கேட்டியா? அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க''
""உன் மொபைல்ல இன்னும் சார்ஜ் இருக்கான்னு கேக்குறாங்க''
பானுமதி, சென்னை-110.
""நான் தப்பு பண்ணினா என் மனைவி "சாரி' கேட்பா''
""இந்தக் காலத்துல இப்படி ஒரு பொம்பளையா... லக்கி மேன் சார் நீங்க''
""நான் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க... நான் "சாரி'ன்னு சொன்னது புடவையை''
வி.ரேவதி, தஞ்சை.
""இரண்டு வீரர்கள் "கத்தி' சண்டை போட்டா என்ன ஆகும்?''
"" தெரியலையே''
""தொண்டை கட்டிக்கும்''
ஆ.சுகந்தன், கம்பைநல்லூர்.
""என்ன சார்... சம்மர் மொட்டையா?''
""நீங்க வேற... என் மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டு வர்றேன்''
பி.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.