* "வர வர நீங்க இளைச்சிக்கிட்டே போறதா
எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க''
"நீ என்ன சொன்னே?''
"ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான்
இருக்கும்ன்னு சொன்னேன்''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
* "காணாமல் போன உங்க மனைவி எப்படி வீட்டுக்கு வந்தாங்க?''
"நீ காணமல் போனதிலிருந்து எங்கம்மா நல்லா சாப்பிடுறாங்க. சந்தோசமா இருக்காங்கன்னு பேப்பர்ல விளம்பரம் போட்டேன். வந்துட்டா''
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
* "ஸ்லீப்பர் கோச்சில் குறட்டை விட்டு
தூங்கினது மிஸ்டேக்''
"ஏன் எழுப்பிவிட்டுட்டாங்களா?''
"எக்ஸ்டிரா சார்ஜ் போட்டுட்டாங்க''
ஏ.நாகராஜன், பம்மல்.
* "புலவரே... இது என்ன புட்டு சுடுதல், இடியாப்பம் பிழிதல், வடை சுடல்ன்னு ஓலையில் எழுதி
வந்துள்ளீர்?''
"தாங்கள் தானே மன்னா நேற்று அவையில் ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்
எழுப்பினீர்கள்''
ஆர்.யோகமித்ரா, சென்னை-73.
* "பீரோ கதவை ஏன் திறந்தே?''
"ஏட்டையா இதென்ன கேள்வி... சின்னப்
புள்ளத்தனமா இருக்கு... கதவு
பூட்டியிருந்தது... அதான் திறந்தேன்''
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
* "எடுத்ததுக்கெல்லாம் நீங்க சத்தியம்
பண்ணுவீங்களாமே?''
"சத்தியமா அப்பட்டமான பொய்யிங்க அது''
வி.ரேவதி, தஞ்சை.
* "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு
சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
"எங்க சண்டைய யூ டியூப்ல போட்டு
கலக்கிட்டோம்ல... ஃபேஸ்புக்ல ஏகப்பட்ட லைக் விழுந்திருக்கே''
எஸ்.வேல் அரவிந்த், காங்கேயம்.
* "என்னோட மருமகள் என் குடும்பத்தை உருப்பட விடமாட்டாள்ன்னு நெனைக்கிறேன்''
"ஏன் இப்டிச் சொல்றீங்க?''
"அப்புறம் என்ன? வெங்காய சாம்பார், வெங்காய சட்னி, வெங்காய பஜ்ஜின்னு நாள் தவறாமச்
செஞ்சா குடும்பம் என்னத்துக்கு ஆவும்?''
ஆர்.எம்.வடுகநாதன், வேதாரண்யம்.