""ஏன் வீட்டுக்கு வாசலை கொல்லைப்புறம் வெச்சு கட்டியிருக்கிறீர்கள்?''
""பாங்க் மேனேஜர்தான், நான் லோன் வாங்கினப்ப
என்னிடம் மறக்காமல் "திருப்பி'க் கட்டணும்னு சொன்னார்''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
""ராணியாரின் பலம் என்னவென்று எங்களுக்குத் தெரிந்த அளவுகூட மன்னருக்குத் தெரியாது என்று சொல்கிறாரே, யாரவர் ?''
""பல்லக்குத் தூக்கி''
-வி. ரேவதி, தஞ்சை.
""எங்க தமிழ் வாத்தியார் திருவள்ளுவர் மாதிரி''
""அவ்வளவு புலமையா?''
"" இல்ல... நச்சுனு ரெண்டே அடியில புரிய வச்சிடுவாரு''
-வி. ரேவதி, தஞ்சை.