தாகூர் நோபல் பரிசு பெறும் வரை வங்காளிகள் அவரை கண்டுகொள்ளவில்லை. கல்கத்தா சர்வகலாசாலை தாகூருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. மேலும் தாகூரை அவமதிக்கும் நோக்கில் தாகூரின் வங்காள நூல்களிலிருந்து சில வரிகளைக் கொடுத்தும் பிழையின்றி எழுதும்படி கேள்வித் தாளில் கேட்டிருந்தார்கள். நோபல் பரிசு கிடைத்த பின்பே கல்கத்தா சர்வகலாசாலை அவரை வலிய அழைத்து டாக்டர் பட்டம் கொடுத்தது. வங்காளிகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது புகழ் பாடினர்.