பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் படம் "ராதே ஷியாம்'. இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. இது ஜரோப்பாவில் நடக்கும் காதல் கதை. தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
--------------------------------------------------------------------------------
"துப்பறிவாளன்', "நம்ம வீட்டு பிள்ளை' படங்களில் நடித்தவர் அனு இம்மானுவல். தமிழ், தெலுங்கில் உருவாகும் "மகா சமுத்திரம்' எனும் படத்தில் இவரும் ஒரு நாயகியாக இணைந்துள்ளார். மல்டி ஸ்டார் படமான இதில் சர்வானந்த் , சித்தார்த், அதிதிராவ் நடிக்கின்றனர்.
--------------------------------------------------------------------------------
நயன்தாரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் "நிழல்' என்ற படத்தில் நடிக்கிறார். த்ரில்லர் படமான இதில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை.
--------------------------------------------------------------------------------
சின்னத்திரையில் பிரபலமான நடிகை வாணி போஜன் "ஓ மை கடவுளே', "லாக்கப்' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தன. இப்போது 5 படங்களில் நாயகியாக நடிக்கிறார். இதனால் மெகா தொடர்களிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் முடிந்த பின்னர், இரண்டு வாரங்கள் மட்டும் கணவருடன் நேரம் செலவழிக்கத் திட்டமிட்டிருக்கும் காஜல் அகர்வால், நவம்பர் மூன்றாவது வாரத்திலிருந்து தொடர்ந்து படப்பிடிப்புக்குச் செல்ல முடிவெடுத்துள்ளாராம்.
--------------------------------------------------------------------------------
சிலம்பரசன் கடந்த சில மாதங்களாக சுட்டுரை, முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களைச் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
--------------------------------------------------------------------------------
நடிகர் கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு 2013-இல் உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. 7 ஆண்டுகளுக்குப் பின் ரஞ்சனி மீண்டும் கர்ப்பமான நிலையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.