சிரி... சிரி...

""தலைமறைவா இருந்த தலைவரை போலீஸ் எப்படி கண்டுபிடிச்சாங்க?''""வெற்றிகரமாக நூறு நாள் தலைமறைவாக இருந்ததைக் கொண்டாடி, செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வெச்சு மாட்டிக்கிட்டாரு!''
சிரி... சிரி...

""தலைமறைவா இருந்த தலைவரை போலீஸ் எப்படி கண்டுபிடிச்சாங்க?''
""வெற்றிகரமாக நூறு நாள் தலைமறைவாக இருந்ததைக் கொண்டாடி, செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வெச்சு மாட்டிக்கிட்டாரு!''

நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்.

அவர்: காசு இல்லைனா கட்டின பெண்டாட்டி கூட மதிக்க மாட்டா .
இவர்: என் பெண்டாட்டி அப்படி இல்லை .
அவர்: நிஜமாவா ?
இவர்: ஆமாம். காசு இருந்தா கூடஅவ என்னை மதிக்க மாட்டா .

""தலைவர் ஆற்றில் மணல் அள்ளினார். இது எந்தக் காலம்?''
""ஆற்றில் தண்ணீர் ஓடாத காலம் சார்''

அப்ரோஸ் பானு,
சென்னை- 131.

வந்தவர்: சார் வெளியே போன என் மனைவியைக் காணலை .
போலீஸ்: அடையாளம் சொல்ல முடியுமா ?
வந்தவர்: அவ வெளியே போகும் போது மேக் அப் போட்டுனு போனாளா இல்லையான்னு நான் பார்க்கலையே சார் .

""ஒரே ஒரு இடத்தைத் தவிர எல்லா இடத்திலும் தேடியாச்சு. பொருள் கிடைக்கல''
""தேடாத அந்த ஒரே ஒரு இடம் எது?''
""தொலைந்த பொருள் இருக்கும் இடம் தான்''

- ஏ. நாகராஜன்,
பம்மல்.

அவர்: தலைவருக்கு சுகர் இருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு .
இவர்: ஏன் ?
அவர்: இப்ப எல்லா ஸ்வீட் கடை திறப்பு விழாவுக்கும் தலைவரைத்தான் கூப்பிடுறாங்க .

-தீபிகா சாரதி,
சென்னை -5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com