""அந்தாளு கடன் கேட்கத்தான் வந்திருக்கான்னு தோணுதுங்க''
""எப்படிச் சொல்ற?''
""உங்களைப் பத்தி புகழ்ந்து பேசினாரே?''
-வி. ரேவதி,
தஞ்சை.
""ஒருத்தன் நல்லா இருந்தால் பார்த்து கண் திருஷ்டி போடவே கூடாது''
""என்ன பண்ணனும்?''
""வாயால் புலம்பிக் கொட்டிடணும்''
""பாதி கச்சேரியில் பாகவதர் ரவாதோசை
ஒன்னுன்னு மைக்கில்ஏன் சொல்றார்?''
""சபா கேன்டீனுக்கு குரல் கொடுக்கிறார்.''
""பாதி ஷோவிலேயே மேஜிக் முடிந்து போச்சா?
ஏன்?''
""மேஜிக் நிபுணர் மாயமாகி விட்டார்''
""உங்கள் வீட்டுக்கு வரநீர் வழிதான் இருக்கா? என்னய்யா சொல்றே?''
""ரெண்டுசாக்கடையைத்தாண்டி வரணும்னு சொல்றேன்''
""ஏன் ராமு... மாஸ்க் மாட்டிக்கிட்டு வாட்ஸ்அப் பாக்குறே?''
""எங்க வாட்ஸ்அப் க்ரூப் அட்மினுக்கு கரோனாவாம்''
- ஏ.நாகராஜன்,
பம்மல்.