""மாமனார் வீட்டுல என்னை வாழைப்பழம் மாதிரி நினைக்கிறாங்க!''
"" வாழைப்பழம் மாதிரியா?''
""ஆமா... சீப்பா நினைக்கிறாங்க!''
""இந்த புத்தகத்தை முழுசா ஒரு தடவை படிச்சீங்கன்னா போதும், உங்க கவலைகள்ல பாதி தீர்ந்துடும்!''
""அப்ப, 2 தடவை படிச்சா, முழு கவலையும் தீர்ந்துடும்னு சொல்லு ?''
""உண்மை எப்போதும் கசக்கும்..''
""அப்ப சுகர் பேஷண்ட்டுக்கு நல்லதுன்னு சொல்லுங்க?''
""நாய் ஜாக்கிரதைன்னு இருந்த போர்டுல நாய்கள்
ஜாக்கிரதைன்னு மாத்திருக்
காங்களே, புதுசா நாய் எதுவும் வாங்கிருக்காங்களா?''
""இல்ல ; பழைய நாய்தான் 3 குட்டி போட்டிருக்காம்!''
""நான் சொல்ற கடைல போய் என் பெயரைச் சொல்லு''
""என்ன செய்வான்?''
""விலையைக் கொஞ்சம் கூடச் சொல்வான்''
- ஏ.நாகராஜன்,
பம்மல்.
""நீ தான் எந்த ஊருக்கும் போகலையே, பிறகு எதுக்கு மதுரைக்குப் போக வழி கேக்குறே ?''
""போகாத ஊருக்கு நீ நல்லா வழி சொல்லுவேன்னு எல்லாரும் சொன்னாங்க... அதான்''
-வி. ரேவதி,
தஞ்சை.