பக்தர்களை  திகைக்க வைத்த  வாரியார்!

ஒரு சமயம்  கிருபானந்த வாரியார்,  கதாகாலட்சேப நிகழ்ச்சி ஒன்றில்சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.  தனது பேச்சின்  நடுவே  திடீரென்று,  ""நாமெல்லாம் பெண் பிள்ளைகள்''  என்று கூறினார்.
பக்தர்களை  திகைக்க வைத்த  வாரியார்!

ஒரு சமயம்  கிருபானந்த வாரியார், கதாகாலட்சேப நிகழ்ச்சி ஒன்றில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.  தனது பேச்சின்  நடுவே  திடீரென்று, ""நாமெல்லாம் பெண் பிள்ளைகள்''  என்று கூறினார்.

இதைக் கேட்டதும் பக்தர்கள் அனைவரும் திகைத்துப் போயினர்.  இதற்கான அர்த்தம் புரியாமல்  ஒருவரை  ஒருவர்  பார்த்துக் கொண்டனர்.

அவர்களின்  திகைப்பைக் கண்ட வாரியார் தொடர்ந்து  பேசினார்.  ""உலகில் ஒரே  ஒருவன்தான் ஆண் பிள்ளை.  சிவ பெருமானின்  நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த  முருகனே  அந்த ஆண்பிள்ளை.  உலகத்தில்  பிறக்கும்  மற்ற அத்தனை பேரும் தாயின்  கருவில்  வளர்ந்து  பிறப்பதால் நாம் அனைவரும் பெண்பிள்ளைகளே''  என்று அனைவரின்  திகைப்பிற்கும்  முற்றுப்புள்ளி வைத்தார் கிருபானந்த  சுவாமிகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com