கண்டது
(திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஊரின் பெயர்)
'புலிவாய்''
ஏ.கே.நாசர்,
டி.ஆர்.பட்டினம்.
(மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் உள்ள ஒரு டிபன் கடையின் பெயர்)
'பந்திக்கு முந்து''
வீர.செல்வம்,
பந்தநல்லூர்.
(சீர்காழி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'புளிச்ச காடு''
தீபா,
ளையங்கோட்டை.
கேட்டது
(தஞ்சாவூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியரும், மாணவரும்..)
'எட்டாம் வகுப்பு படிக்கிறே? சொந்தமா ஒரு வீட்டுக் கணக்குப் போட தெரியாதா?''
'எங்களுக்கு சொந்த வீடே கிடையாது சார்..''
மு.தாஜூதீன்,
தஞ்சாவூர்.
(விழுப்புரத்தில் உள்ள பிரபல கார் ஷோரூம் வாசலில் தந்தையும், மகனும்...)
'காலேஜூக்கு போக கார் வாங்கித் தாங்க அப்பா..''
'எதுக்குடா கார். கடவுள் நமக்கு ரெண்டு கால் கொடுத்திருக்காரு தெரியுமா?''
'ஒரு கால் ஆக்ஸிலேட்டரை மிதிச்சு,
இன்னொரு காலில் பிரேக் பிடிக்கதான்பா...?''
கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
(தாம்பரம் ரயில் நிலையத்தில் நண்பர்கள் இருவர் பேசியது)
'எங்கப்பாவைப் பார்த்து கல்யாண ஆசையே விட்டுப் போச்சுடா..''
'ஏன்டா...''
'தினமும் சமைச்சு துணி துவைக்கிறார்டா...''
ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.
யோசிக்கிறாங்கப்பா!
யோசிக்காம எதுவும் செய்யக் கூடாது.
செஞ்சிட்டா யோசிக்கக் கூடாது.
காகை ஜெ.ரவிக்குமார்,
காங்கயம்.
மைக்ரோ கதை
வீட்டுத் தோட்டத்தில் நீண்ட நாள்களாகக் கிடந்த பழைய சைக்கிளை திடீரென காணவில்லை. பக்கத்து வீட்டு பையன்தான் திருடி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவன் பார்வையே திருட்டுப் பார்வையாக இருந்தது. அவன் பேச்சும் கள்ளத்தனமாகத் தெரிந்தது. அவன் நடையும் தவறாகப் பட்டது. மொத்தத்தில் அவனுடைய செயல்கள் அனைத்தும் கள்வனுக்கு உரியதாகவே கணிக்க முடிந்தது.
அடுத்த நாள்தான் ஞாபகத்துக்கு வந்தது. போன வாரம் அந்த பழைய சைக்கிள் உதவாது என காயலான்கடைக்கு எடுத்துச் சென்று விற்று விட்டோமா? என்று. அடாடா.. தப்பாக நினைத்துவிட்டோமோ? என்று மனசு குறுகுறுத்தது.
இப்போது அந்தப் பக்கத்து வீட்டு பையனைப் பார்த்தேன். அவன் நடை, பேச்சு, பார்வை யாவுமே நல்லவனைப் போல் தெரிந்தது.
அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை.
எஸ்எம்எஸ்
இலவசமாய் பெறுவது இன்பம்.
இலவசமாய் கொடுப்பது பேரின்பம்.
பால் ராமமூர்த்தி. பி,
அம்பாசமுத்திரம்.
அப்படீங்களா!
வாட்ஸ் ஆஃப்பில் 'வாய்ஸ் சாட்' எனும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக, இந்தச் சேவையை வாட்ஸ் ஆஃப் நிறுவனம் தொடங்கி உள்ளது.
வாட்ஸ் ஆஃப் குழு தொலைபேசி அழைப்பு சேவையைப் போல் இந்த புதிய வாய்ஸ் சாட் சேவை இருக்கும். குழு தொலைபேசி அழைப்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைபேசி அழைப்பு ஒலி எழுப்பும். ஆனால், வாய்ஸ் சாட் சேவையில் குழு உறுப்பினர்களுக்கு நோட்டிபிகேஷன் எனும் எச்சரிக்கை தகவல் மட்டும் காண்பிக்கும். வேண்டுமென்றால் உறுப்பினர்கள் சேர்ந்து கொள்ளலாம் இல்லை தவிர்த்துவிடலாம்.
எனினும், இந்த வாட்ஸ் சாட்டில் யாரெல்லாம் பங்கேற்றுள்ளார்கள் அவர்களின் புரோபைல் விவரங்களை குழு உறுப்பினர்கள் காணலாம். இந்தக் குழுவில் எழுத்து வடிவில் தகவல்களைப் பதிவிடுவதைப்போல் ஒலி வடிவில் தகவல்களை பதியலாம்.
இந்தச் சேவையைத் தொடங்க வாட்ஸ்ஆஃப் குழுவுக்குள் சென்று வலது பக்கத்தில் உள்ள வாய்ஸ் சாட் சேவையை கிளக் செய்ய வேண்டும். அதற்கு முன்பு வாட்ஸ் ஆஃப்பை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
தற்போது குறைந்தது 33 உறுப்பினர்கள் கொண்ட குழுக்களுக்கு மட்டும் இந்தச் சேவை வழங்கப்பட்டுள்ளது. வாய்ஸ் சாட்டை ஆரம்பித்துவிட்டு ஒரு மணி நேரத்துக்கு யாரும் அதில் சேரவில்லை என்றால் தானாக அந்த வாய்ஸ் சாட் சேவை முடிவடைந்துவிடும்.
அ.சர்ப்ராஸ்