உடல் நலம் குன்றி படுக்கையில் கிடந்த இந்திய எழுத்தாளர் பிரேம் சந்த், அந்நிலையிலும் எழுதிக் கொண்டே இருந்தார்.
அவர் மனைவி கேட்டார்: இந்த நிலையிலும் நீங்கள் எழுதத்தான் வேண்டுமா? நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு உடல் நலத்தைக் கவனிக்கக் கூடாதா?
பிரேம் சந்த் கூறினார்: ஒரு விளக்கின் கடமை - வெளிச்சம் தருவதுதான். அது பிறருக்கு நன்மை தருகிறதா? தீமை தருகிறதா? என்பதைப் பற்றி அதற்குக் கவலையில்லை. எண்ணெயும் திரியும் இருக்கும்வரை எரிந்து ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கும். எண்ணெய் தீர்ந்தவுடன் விளக்கு தானாகவே அணைந்துவிடும்!